செய்திகள்
ஆன்லைன் மூலம் ஆலோசனை

குடும்ப வன்முறை புகார்- வேலூரில் 15 பேருக்கு ஆன்லைனில் ஆலோசனை

Published On 2020-05-22 17:59 IST   |   Update On 2020-05-22 17:59:00 IST
ஊரடங்கு காலத்தில் வேலூர் மாவட்டத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 15 பேருக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர்:

ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் வீடுகளில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறை தொடர்பாக ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கான ஆலோசனை, சட்ட உதவிகள், குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களை பாதுகாக்க இலவச ஆன்லைன் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு மத்தியில் பெண்கள், குழந்தைகள் மூத்த குடிமக்களுக்கு எதிராக நடைபெறும் குடும்ப வன்முறைகளை கருத்தில் கொண்டு இந்த இலவச சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட நபர் அவரை சார்ந்தோர் ஆன்லைனில் அனுப்பும் தகவலின் மூலம் இச்சேவையை செயல்படுத்த முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் இதுவரை குடும்ப வன்முறை தொடர்பாக 15 பேருக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வாடகைக்கு குடியிருக்கும் 70 வயது முதியவருக்கு வீட்டு உரிமையாளர் தண்ணீர தர மறுப்பதாக வந்த புகாரின் பேரில் உடனடியாக வீட்டு உரிமையாளரிடம் பேசி அவருக்கு தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சேவை தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Similar News