செய்திகள்
வேலூர் வந்து சென்ற தம்பதிக்கு கொரோனா
வேலூர் வந்து சென்ற தம்பதிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களது உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் பாகாயம் அருகே உள்ள சஞ்சீவிபுரத்தை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். பிசியோதெரபிஸ்ட் படித்து விட்டு பணி செய்து வந்தார். இவர் பெங்களூருவில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் மனைவியுடன் வேலூருக்கு வந்தார். சுமார் 40 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்த அவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இ-பாஸ் பெற்று பெங்களூருவுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிசியோதெரபிஸ்ட்க்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இறந்த பிசியோதெரபிஸ்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அவரது மனைவிக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுகாதார குழுவினர் வேலூர் சஞ்சீவிபுரத்தி லுள்ள பிசியோ தெரபிஸ்ட் குடும்பத்தினர் உறவினர்கள் 8 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. 8 பேரும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் பெங்களூருவில் இறந்த பிசியோதெரபிஸ்ட் வேலூரில் தங்கி இருந்துவிட்டு 20 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்றார்.
மேலும் பெங்களூருவில் சிலருக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்துள்ளார். அதன் மூலம் அவருக்கு கொரோனா பரவியதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அவரது குடும்பத்தினர் உறவினர்கள் 8 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு பிசியோதெரபிஸ்டுக்கு எங்கிருந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவரும் என்றனர்.
வேலூர் பாகாயம் அருகே உள்ள சஞ்சீவிபுரத்தை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். பிசியோதெரபிஸ்ட் படித்து விட்டு பணி செய்து வந்தார். இவர் பெங்களூருவில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் மனைவியுடன் வேலூருக்கு வந்தார். சுமார் 40 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்த அவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இ-பாஸ் பெற்று பெங்களூருவுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிசியோதெரபிஸ்ட்க்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இறந்த பிசியோதெரபிஸ்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அவரது மனைவிக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுகாதார குழுவினர் வேலூர் சஞ்சீவிபுரத்தி லுள்ள பிசியோ தெரபிஸ்ட் குடும்பத்தினர் உறவினர்கள் 8 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. 8 பேரும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் பெங்களூருவில் இறந்த பிசியோதெரபிஸ்ட் வேலூரில் தங்கி இருந்துவிட்டு 20 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்றார்.
மேலும் பெங்களூருவில் சிலருக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்துள்ளார். அதன் மூலம் அவருக்கு கொரோனா பரவியதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அவரது குடும்பத்தினர் உறவினர்கள் 8 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு பிசியோதெரபிஸ்டுக்கு எங்கிருந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவரும் என்றனர்.