செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேருக்கு கொரோனா

Published On 2020-05-17 15:07 GMT   |   Update On 2020-05-17 15:07 GMT
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரை சேர்ந்த 8 பேர் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு ஒரு வாகனத்தில் வந்தனர். அப்போது அவர்களை அதிகாரிகள் மாவட்ட எல்லையில் தடுத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 41 வயதுடையவரும், அவரது 36 வயது மனைவிக்கும், இவர்களது 9 வயது மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவர்களுடன் வந்த 43 வயதுடையவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News