செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுக்க ஆந்திர எல்லைகளில் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு

Published On 2020-05-02 15:35 IST   |   Update On 2020-05-02 15:35:00 IST
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனைச்சாவடியில் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனைச்சாவடியில் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.

இந்த கண்காணிப்பு உயர் கோபுரத்தின் மீது 3 ஷிப்டுகளில் போலீசார் பணியில் ஈடுபட்டு கண்காணிக்கின்றனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது.

உரிய அனுமதி பெற்று வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Similar News