செய்திகள்
குடியாத்தம் சிரசு திருவிழாவுக்கு அனுமதி இல்லை- கலெக்டர் அறிவிப்பு
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவுக்கு அனுமதி இல்லை என வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவும் ஒன்று. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி வைகாசி மாதம் முதல் நாள் சிரசு விழா கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் அனைத்து மத விழாக்களும் ரத்து செய்யப்படுகிறது. அதனால் அடுத்த மாதம் நடைபெற இருந்த குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவுக்கு அனுமதி இல்லை என வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.