செய்திகள்
தற்கொலை

வேதாரண்யத்தில் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-04-20 12:54 IST   |   Update On 2020-04-20 12:54:00 IST
வேதாரண்யத்தில் தூக்கு மாட்டி வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வீரசுந்தரம் (வயது 18). டிப்ளமோ படித்து உள்ளார். தனது பாட்டியிடம் செலவிற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த வீரசுந்தரம் வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் வீரசுந்தரத்தின் உடலை வேதாரண்யம் போலீசார் கைப்பற்றி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News