செய்திகள்
கறிவிருந்து வைத்து டிக்-டாக்கில் வெளியிட்ட 10 பேர் போலீசில் சிக்கினர்
மயிலாடுதுறை அருகே வயல் வெளியில் கறிவிருந்து வைத்து டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட 10 பேர் போலீசில் சிக்கினர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அடுத்து மணல்மேடு அருகே வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் வயல் வெளியில் பிரியாணி தயாரித்து சமுக விலகலை தவிர்த்து உணவு அருந்தியதை டிக்-டாக் வீடியோவாக வெளியிட்டனர்.
இதை பார்த்து போலீசார் எந்தஊர் என விசாரித்ததில் மேற்படி மணல்மேடு வில்லியநல்லூர் என தெரியவந்தது இதை அடுத்து நேற்று அதிகாலை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுராஜா தலைமையில் வில்லியநல்லூர் கிராமத்திற்கு சென்று கறிவிருந்தில் பங்குபெற்ற வில்லியநல்லூர் உத்ராபதி கோவில் தெருவை சேர்ந்த அருண் என்ற அருண்பிரசாத் (வயது22), அக்ஹராகரம் அப்புஎன்ற சதீஸ்குமார் (22), சிவா(27), பாலமுருகன் (22), வெங்கடேஷ்(26).கலைமணி(27), ராஜேஷ் (22), பாலசுந்தரம்(22).தினேஷ் (21) மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மணல்மேடு போலீசார் அவர்களை இதுபோல் தடைஉத்தரவு காலங்களில் விதிமீறல் நடைபெறக்கூடாது என உறுதிமொழி எடுத்து எச்சரித்து அனுப்பினர்.