செய்திகள்
கொரோனா வைரஸ்

வேதாரண்யத்தில் நாகை மாவட்ட எல்லைகள் மூடல்

Published On 2020-04-18 19:51 IST   |   Update On 2020-04-18 19:51:00 IST
வேதாரண்யத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வேதாரண்யம் தாலுக்காவில் வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றியம், காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேதாரண்யம் நகராட்சி பகுதிக்குள் வாகனங்கள் வருவதை கட்டுப்படுத்த 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இதையும் மீறி நாள்தோறும் 1000 முதல் 2 ஆயிரம் வாகனங்கள் வரை நகராட்சி பகுதிக்குள் வந்து செல்கின்றன. மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு நாகை மாவட்ட எல்லையான துளசியாப் பட்டினம், செங்காதலை பாலம் ஆகியவை அடைக்கப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

Similar News