செய்திகள்
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசிய காட்சி.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2020-02-24 12:26 GMT   |   Update On 2020-02-24 12:26 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 67-வது பிறந்த நாளை இளைஞர்கள் எழுச்சி நாளாக கொண்டாட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது. அவை தலைவர் முகமதுசகி தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.

மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பொருளாளர் நரசிம்மன், கதிர்ஆனந்த் எம்.பி., அ.மா.ராமலிங்கம் முன்னாள் கவுன்சிலர் அன்பு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தல் குறித்தும், உள்ளாட்சி தேர்தலில் செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மு.க.ஸ்டாலின் 67-வது பிறந்த நாளை இளைஞர்கள் எழுச்சி நாளாக கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டங்கள் தெருமுனை கூட்டங்கள் நடத்தி கொண்டாட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் ஒத்துழைப்பு வழங்குவது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 2 கோடிக்கு மேல் கையெழுத்து பெற்று சாதனை படைக்க உதவிய கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News