செய்திகள்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி திடீர் தர்ணா

Published On 2020-02-24 11:03 GMT   |   Update On 2020-02-24 11:03 GMT
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் மூதாட்டி ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சண்முகம் சுந்தரம் தலைமையில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

குடியாத்தம் ஆர்.எஸ் நகரை சேர்ந்த அனுராதா (வயது 71 )அவருடைய மகன் அய்யப்பன் ஆகியோர் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் திடீரென குறைதீர்வு கூட்டம் நடந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அனுராதா அவருக்கு சொந்தமான வீட்டை அவருடைய மகள் மருமகன் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் அதனால் அவரும் அவருடைய மகனும் வீடு இல்லாமல் தவிப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவருடைய மகள் ஏமாற்றி வாங்கிய வீட்டை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .

போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதனையடுத்து அனுராதா கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு சென்றார்.

Tags:    

Similar News