செய்திகள்
காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

திருப்பத்தூர், கணியம்பாடியில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2020-02-20 11:11 GMT   |   Update On 2020-02-20 11:11 GMT
திருப்பத்தூர் மற்றும் கணியம்பாடியில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்:

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகளுக்கு ரோஜா பூ மாலை அணிவித்து நூதன போராட்டம் நடத்தினர்.

கியாஸ் சிலிண்டர் விலை ரூ.140 அதிகரித்ததை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்  மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புக்கு ரோஜா பூ மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கணியம்பாடி வட்டார காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கணியம்பாடி தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாபு தலைமை தாங்கினார்.

கணியம்பாடி வடக்கு வட்டார தலைவர் பழனி முன்னிலை வகித்தார். இதில் வேலூர் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் கலந்து கொண்டு பேசினார். இதில் அரக்கோணம் நகர தலைவர் துரை சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் விநாயகம், பொன். நடராஜன், மாவட்ட துணை தலைவர் சிதம்பரம், மாவட்ட பொதுச்செயலாளர் மணி, அரக்கோணம் நகர பொருளாளர் லவக்குமார், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, கம்ம சமுத்திரம் மணி, நஞ்சுகொண்டபுரம் கார்த்தி சிவகுமார் கீழ்அரசம்பட்டு, ஏழுமலை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News