செய்திகள்
தேவி

சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

Published On 2020-02-14 08:00 GMT   |   Update On 2020-02-14 08:17 GMT
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவி பதவியேற்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு மறுநாள் காலை வேட்பாளர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் தேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊராட்சி மன்ற தலைவராக பிரியதர்ஷினி பொறுப்பு ஏற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவி மாங்குடியின் வெற்றியே செல்லும் என தீர்ப்பு கூறினர்.

இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். பிரியதர்ஷினியும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்தனர்.
Tags:    

Similar News