செய்திகள்
காரைக்குடி அருகே சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் பீதி
காரைக்குடி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களிடையே பீதி எழுந்துள்ளது.
காரைக்குடி:
இந்த வனப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சிறுத்தை நடமாட் டம் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இது குறித்து காரைக்குடி வனவர் திருப்பதியிடம் கேட்டபோது, பள்ளத்தூரில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் எங்களிடம் கூறினர்.
அதைத்தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டம் அந்தப்பகுதியில் உள்ளதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரை சிறுத்தையின் காலடித்தடம் எதுவும் அங்கு பதிவாகி இருப்பது தெரியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூரில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.
இந்த வனப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சிறுத்தை நடமாட் டம் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இது குறித்து காரைக்குடி வனவர் திருப்பதியிடம் கேட்டபோது, பள்ளத்தூரில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் எங்களிடம் கூறினர்.
அதைத்தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டம் அந்தப்பகுதியில் உள்ளதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரை சிறுத்தையின் காலடித்தடம் எதுவும் அங்கு பதிவாகி இருப்பது தெரியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்றார்.