அதிமுக சிறந்த மக்களாட்சியை தருகிறது- அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் ராஜா தலைமையில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகத்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-
யார் ஆட்சியில் நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். யார் நல்லாட்சி தந்தார்கள் என்பதை சிந்தித்து பார்த்து செயல்பட வேண்டும். தொலைநோக்கு திட்டம் அம்மா ஆட்சியில் இருந்து எடப்பாடி ஆட்சி வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தான் சிறந்த மக்களாட்சியை தருகிறது.
மறைந்த முன்னாள் தமிழ் மொழி வீரர்கள் நமது மண்ணில் வாழ்ந்து பெருமை சேர்த்து உள்ளனர். இன்று நடைபெறும் இந்த கூட்டம் மொழிக்காக உயிர் நீத்த மண்ணின் மைந்தர்களுக்கானது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகானந்தம், சந்திரன், பாசறை மாவட்ட செயலாளர் ஆபரத்தனபட்டி பிரபு, மாவட்ட அமைப்பு சாரா அணிச் செயலாளர் சீவாஜி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கோபி, ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், கணேசன், பழனிசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.