செய்திகள்
காரைக்குடியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை மிரட்டி 9 பவுன் நகை பறிப்பு
காரைக்குடியில் முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை மற்றும் பொருட்களை பறித்து சென்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி முத்துநகரைச் சேர்ந்தவர் ஜான்கருணாநிதி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயராணி (வயது 43). இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டார். மதிய நேரத்தில் ஜெயராணி வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ஜெயராணி கழுத்தில் கத்தியை வைத்து நகை-பணத்தை தருமாறு மிரட்டினர். இதனை தொடர்ந்து அவர் அணிந்திருந்த தாலி செயின் உள்பட 9 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை திருடிக்கொண்டு அந்த நபர்கள் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.