செய்திகள்
பன்றிகள் நடமாட்டம்

ஜெயங்கொண்டம் பகுதிகளில் பன்றிகள் நடமாட்டத்தால் நோய் பரவும் அபாயம்

Published On 2019-12-29 17:58 GMT   |   Update On 2019-12-29 17:58 GMT
ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பன்றிகள் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை கிளறுவதன் மூலம் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலங்களில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News