செய்திகள்
சென்னை வந்த விமானத்தில் பெண் பயணி பலி
சென்னை வந்த விமானத்தில் பெண் பயணி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
குவைத்தில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு வந்த விமானத்தில் பயணம் செய்த மொய்தீன் பீ பவாதீன் (65). என்ற பெண், தனக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்களிடம் தெரிவித்தார். உடனே இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். விமானம் தரை இறங்கியதும் மொய்தீன் பீ பவாதீனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவர் மாரடைப்பில் உயிரிழந்தது தெரிய வந்தது. பலியான அவர் சென்னையை சேர்ந்தவர்.