செய்திகள்
நகை கொள்ளை

படப்பை அருகே பூட்டை உடைத்து 70 பவுன் திருட்டு - கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

Published On 2019-10-26 06:59 GMT   |   Update On 2019-10-26 06:59 GMT
படப்பை அருகே பூட்டை உடைத்து 70 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

படப்பை:

படப்பை அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

கடந்த 23-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்று இருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார். கொள்ளை போன வீட்டின் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தது. மேலும் கொள்ளையர்கள் முகமூடி அணிதிருந்தனர்.முகமூடி அணிதிருந்ததால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், மணிமாறன், தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு முகமூடி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News