செய்திகள்
பிரதமர் மோடி- எடப்பாடி பழனிசாமி

மாமல்லபுரத்தில் சிறப்பான ஏற்பாடு- எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published On 2019-10-25 06:35 GMT   |   Update On 2019-10-25 06:35 GMT
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

சீன குடியரசுத் தலைவரின் வருகையின் போது செய்யப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், அன்பான உபசரிப்பு ஆகியவை நமது கலாசாரத்தையும், மரபையும் ஒருசேர பிரதிபலித்தது.


மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சி மாநாடு தனக்கும், சீன நாட்டு குடியரசுத் தலைவருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.

உச்சி மாநாட்டிற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்தமைக்கு தமிழ்நாட்டு பொது மக்களுக்கும், கலாசார, சமூக, அரசியல் அமைப்புகளுக்கும், தமிழ்நாடு அரசிற்கும், முதல்-அமைச்சருக்கும் என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.
Tags:    

Similar News