செய்திகள்
ராமாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பலி
ராமாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
ராமாபுரம், ஸ்ரீகங்கை அவின்யூ 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராணி (60). இவர் நேற்று மாலை கடைக்கு செல்வதற்காக பேரன் பாபுவுடன் மொபட்டில் சென்றார்.
அதே பகுதி ராயலா நகர் 1-வது தெருவில் வேகமாக சென்றபோது வேகத்தடை மீது மொபட் ஏறி இறங்கியது. இதில் வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த ராணி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
தலையில் படுகாயம் அடைந்த ராணியை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.