செய்திகள்
விபத்து

வேலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி

Published On 2019-08-26 12:00 GMT   |   Update On 2019-08-26 12:00 GMT
வேலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்றிரவு 10 மணியளவில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

பஸ்சை டிரைவர் மோகன் ஓட்டி வந்தார். கண்டக்டராக திருப்பத்தூர் அவ்வை நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 54) இருந்தார். பஸ் வேலூர் ரத்தினகிரி அருகே வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் பஸ் மோதியது. விபத்தில் பஸ்சின் இடது புறம் நொறுங்கியது. இதில் பஸ்சின் முன் சீட்டில் அமர்ந்திருந்த கண்டக்டர் சீனிவாசன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் அடையாளம் தெரியாத பெண் ஒருவரும் 2 வாலிபர்களும் இடிபாடுகளில் சிக்கினர்.

போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை கடப்பாறை கொண்டு நீக்கி மீட்டனர். அவர்கள் 3 பேரும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News