ஆற்காடு அருகே கார்-பைக் மோதி நண்பர்கள் 2 பேர் பலி
ஆற்காடு:
ஆற்காடு அருகே உள்ள மொழுகம்பூண்டியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (20) டிரைவர். இருவரும் நண்பர்கள். 2 பேரும் இன்று காலை சென்னைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். விளாப்பாக்கம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் திடீரென பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு நடு ரோட்டில் விழுந்தனர். பார்த்திபனுக்கும், வெங்கடேசனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன், வெங்கடேசன் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.