செய்திகள்
கொள்ளை

திருப்பத்தூர் அருகே தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை ரூ.5 லட்சம் திருட்டு

Published On 2019-08-20 11:53 GMT   |   Update On 2019-08-20 11:53 GMT
திருப்பத்தூர் அருகே தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (72) இவர் திருப்பத்தூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி அம்சவேணி (52). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் அருகே உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தெரு பகுதியில் உள்ள தனது மகன் பிரகாஷ் என்பவரது வீட்டில் தங்கி தனது மனைவிக்கு சிகிச்சை செய்து வருகின்றனர்.

நேற்று இரவும் குடும்பத்துடன் அனைவரும் பிரகாஷ் வீட்டிலேயே தங்கினர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் தங்கவேல் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தங்கவேலு திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் கிராமப்பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News