செய்திகள்
விபத்து

ஆற்காடு அருகே பைக் மீது வேன் மோதி கண்டக்டர் பலி

Published On 2019-08-13 11:06 GMT   |   Update On 2019-08-13 11:06 GMT
ஆற்காடு அருகே பைக் மீன் வேன் மோதிய விபத்தில் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காடு அருகே உள்ள வளையாத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 36). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சசிரேகா. இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர்.

பழனி நேற்று ஆரணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வளையாத்தூர் அரசு பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த வேன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News