செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி

நாட்டறம்பள்ளி அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2019-08-11 13:10 GMT   |   Update On 2019-08-11 13:10 GMT
நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் சிவா இவரது மனைவி செல்வி (வயது 38). இவர் இன்று காலை அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பாம்பு செல்வியை கடித்தது. வலியால் துடித்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்வி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News