செய்திகள்
தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் தற்கொலை

Published On 2019-08-06 10:31 GMT   |   Update On 2019-08-06 10:31 GMT
ஜோலார்பேட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் தேவகுமார் (வயது 33). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டாகிறது. குழந்தை இல்லை.

தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சத்யா கணவனை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

தேவகுமார் மனைவி சத்யாவை குடும்பம் நடத்த வருமாறு பல முறை அழைத்து உள்ளார். ஆனால் சத்யா அதற்கு சம்மதிக்க வில்லை.

இதனால் மனமுடைந்த தேவகுமார் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருப்த்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News