செய்திகள்

ஆற்காடு அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2019-06-14 11:23 GMT   |   Update On 2019-06-14 11:23 GMT
ஆற்காடு அருகே குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த சின்னதக்கை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அரக்கோணத்தை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருப்பதியில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் வர்சலா, கிராமநிர்வாக அலுவலர் மஞ்சுநாத், வருவாய் ஆய்வாளர் சத்யா மற்றும் திமிரி சமூக ஆர்வலர் தமிழரசன் தலைமையில் 3 குழுவினர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களுக்கு திருமண வயது 18.

அதற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் நடத்தினால் சட்டபடி குற்றம் என பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News