செய்திகள்
வேலூர் பஸ்சில் ரூ.75 ஆயிரம் விட்டு சென்றது யார்? போலீஸ் விசாரணை
தனியார் பஸ்சில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து ரூ.75 ஆயிரம் ரொக்கம் பணத்தை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வேலூர்:
குடியாத்தத்தை சேர்ந்தவர் லால் (வயது 35). மருந்து விற்பனை பிரதிநிதி. கடந்த 7-ந் தேதி குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு தனியார் பஸ்சில் சென்றபோது இருக்கையின் அருகே ஒரு பை கிடந்துள்ளது.
அதில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்துடன் கூடிய பையை லால், பஸ் உரிமையாளர் சக்கத் தலைவர் சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், நேற்று லால், பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.
அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், பஸ் உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கோவிந்தராஜ், செயலர் நவீன் ஆகியோர் உடனிருந்தனர்.
நேர்மையாக பணத்தை ஒப்படைத்த லாலை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் பாராட்டினர். தொடர்ந்து, பணத்தை விட்டு சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தத்தை சேர்ந்தவர் லால் (வயது 35). மருந்து விற்பனை பிரதிநிதி. கடந்த 7-ந் தேதி குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு தனியார் பஸ்சில் சென்றபோது இருக்கையின் அருகே ஒரு பை கிடந்துள்ளது.
அதில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்துடன் கூடிய பையை லால், பஸ் உரிமையாளர் சக்கத் தலைவர் சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், நேற்று லால், பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.
அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், பஸ் உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கோவிந்தராஜ், செயலர் நவீன் ஆகியோர் உடனிருந்தனர்.
நேர்மையாக பணத்தை ஒப்படைத்த லாலை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் பாராட்டினர். தொடர்ந்து, பணத்தை விட்டு சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.