செய்திகள்

அவனியாபுரத்தில் டெய்லர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2019-05-30 23:06 IST   |   Update On 2019-05-31 00:02:00 IST
அவனியாபுரத்தில் டெய்லர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அவனியாபுரம்:

அவனியாபுரம் ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 44). டெய்லரான இவர் கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பால கிருஷ்ணன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்த ராஜன் (58). கூலித்தொழிலாளியான இவருக்கு சில மாதங்களாக உடல்நலக்குறைவு இருந்தது. டாக்டரிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த ராஜன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News