செய்திகள்

திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை மயக்கி உல்லாசம்- வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2019-05-30 10:34 GMT   |   Update On 2019-05-30 10:34 GMT
திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை மயக்கி உல்லாசம் அனுபவித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் அருகில் உள்ள தோப்புபட்டியை சேர்ந்த மாயாண்டி மகன் வேல்முருகன் (வயது22). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுடன் பழகி வந்தார். அவரை காதலிப்பதாக கூறி கடந்த 4.3.2019-ம் தேதியன்று கடத்தி சென்றார்.

பின்னர் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணம் செய்து யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தார். தனது மகளை காணாமல் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே திருமணமான ஒரு மாதத்திலேயே உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என கூறி விட்டு அவரை பெற்றோர் வீட்டிற்கு செல்லுமாறு வேல்முருகன் கூறி உள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வாழ்க்கையை சீரழித்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

இது குறித்து விசாரணை நடத்துமாறு நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இன்ஸ்பெக்டர் தேன்மொழி வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை தேடி வருகிறார்.

Tags:    

Similar News