செய்திகள்

ஆதம்பாக்கத்தில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு- 3 மாணவர்கள் கைது

Published On 2019-05-27 08:51 GMT   |   Update On 2019-05-27 08:51 GMT
ஆதம்பாக்கத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், சாந்தி நகரை சேர்ந்தவர் லாவண்யா. தனியார் இணைய தள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர், இரவு பணிக்கு செல்வதற்காக ஆதம்பாக்கம், மோகனபுரி தெருவில் காருக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென லாவண்யா வைத்திருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் லாவண்யாவிடம் செல்போன் பறித்தது ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த சஞ்சய், பாலாஜி, விக்னேஷ் என்பது தெரிய வந்தது.

அவர்கள் 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். பிடிபட்டவர்களில் சஞ்சய் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்து உள்ளார்.

பாலாஜி கிண்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். விக்னேஷ் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார்.

உல்லாச செலவு செய்ய அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதே போல் அவர்கள் வேறு எந்த இடங்களிலும் கைவரிசை காட்டி உள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News