செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் கொத்தனாரை தாக்கி ரூ.31 ஆயிரம் கொள்ளை

Published On 2019-05-20 08:58 GMT   |   Update On 2019-05-20 08:58 GMT
நுங்கம்பாக்கத்தில் கொத்தனாரை தாக்கி ரூ.31 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சையது அலி. கொத்தனார். இவர் நுங்கம்பாக்கத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவர் சம்பள பணம் ரூ. 31 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது 4 பேர் கும்பல் அவரை தாக்கி சையது அலியிடம் இருந்த ரூ. 31 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News