செய்திகள்

கோபி அருகே 5 வயது மகனுடன் தாய் மாயம்

Published On 2019-05-18 11:27 GMT   |   Update On 2019-05-18 11:27 GMT
கோபி அருகே 5 வயது மகனுடன் தாய் மாயமானார். கண்டுபிடித்து தரக்கோரி கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

கோபி:

கோபியை அடுத்த பெளவகாளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி சத்யா (வயது25). இவர்களுக்கு கவின் ஆகாஷ் (5) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சத்யா அங்குள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். வீட்டுக்கு வந்ததும் சத்யா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யாவை வெங்கடாசலபதி கண்டித்தார்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வெங்கடாசலபதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது மனைவி சத்யா, மகன் கவின் ஆகாஷ் ஆகியோர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியையும் மகனையும் பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை.

இதையடுத்து வெங்கடாசலபதி கோபி போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மனைவி மற்றும் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார்.

அதன்பேரில் கோபி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சத்யா, கவின் ஆகாஷ் இருவரையும் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News