செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 8 பேர் கைது

Published On 2019-05-15 23:12 IST   |   Update On 2019-05-15 23:12:00 IST
தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் தருமபுரி மாவட்ட போலீசார் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக மது பாட்டிலை வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர். 

இதில் தருமபுரியில் ஒருவரும், அரூரில் 2 பேரும் மற்றும் பென்னாகரதில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். 

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News