பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி பலி
பெருந்துறை:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது33). தனசேகர் தற்போது வெள்ளோடு அருகே உள்ள குட்டபாளையத்தில் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
தனசேகர் தினமும் குட்ட பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறையில் தான் வேலை செய்யும் பனியன் கம்பெனியில் கிளை அலுவலகம் செயல்படுகிறது. அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பெருந்துறையில் இருந்து திருப்பூருக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.
அதே போன்று இன்றும் குட்ட பாளையத்திலிருந்து தனசேகர் தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார். குனம்பட்டி பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வேனும், தனசேகர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.