செய்திகள்

தஞ்சையில் தனியார் பஸ் டிரைவர் மீது தாக்குதல்

Published On 2019-05-09 11:35 GMT   |   Update On 2019-05-09 11:35 GMT
தஞ்சையில் தனியார் பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றொரு டிரைவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

ஒரத்தநாடு அருகே காரமணிதோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது-23). தனியார் பஸ் டிரைவர். இவருக்கும் இன்னொரு தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரியும் அரசபட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் (24) என்பவருக்கும் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் முருகேசன் ஒரத்தநாட்டிலிருந்து தஞ்சை நாஞ்சிக்கோட்டைக்கு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது அவருக்கு பின்னால் பஸ்சை ஓட்டி வந்த ஆனந்தராஜ், முருகேசன் ஓட்டிய பஸ்சுக்கு முன்பு சென்று அவரை தாக்கியதுடன் பஸ்சின் சைடு கண்ணாடியையும் உடைத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி முருகேசன் தமிழ் பல்கலைக்கழகப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார், அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News