செய்திகள்

ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-04-24 11:16 GMT   |   Update On 2019-04-24 11:16 GMT
ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

சென்னை திருவேல்லிகேனி பகுதியை சேர்ந்தவர் முகமது சாகிர் பாஷா(42). இவரது மனைவி காதர்பீவி(40). கணவன்-மனைவி இருவரும் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக சுவேதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தனர்.

நள்ளிரவில் காதர்பீவி ஜன்னல் ஓரமாக தூங்கி கொண்டிருந்தார். ரெயில் ஈரோடு ஜங்‌ஷன் அருகே வந்தபோது, மர்மநபர் ஒருவர் வெளியே நின்று கொண்டு காதர்பீவி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்றான்.

இதில் உஷார் ஆன அவர், செயினை இருக்கமாக பிடித்து கொண்டதால் பாதி செயினை மட்டும் அறுந்து மர்மநபரிடம் சிக்கியது. இதில் 4 பவுன் செயினில், 2 பவுன் மட்டுமே தப்பியது.

இதுகுறித்து முகமது சாகீர் பாஷா இமெயில் மூலம் நேற்று ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News