செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதல்- 6 பேர் காயம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 15 பேர் மற்றும் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்றது. தண்டலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது அரசு பஸ் பின்னால் மோதியது.
இதில் வேனில் இருந்த மாணவர் தர்ஷன் (10) படுகாயம் அடைந்தான். ஊழியர்கள் விவேக், ராமு, மணிகண்டன், அமல்ராஜ், லலிதா என்ற பஸ் பயணியும் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 15 பேர் மற்றும் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்றது. தண்டலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது அரசு பஸ் பின்னால் மோதியது.
இதில் வேனில் இருந்த மாணவர் தர்ஷன் (10) படுகாயம் அடைந்தான். ஊழியர்கள் விவேக், ராமு, மணிகண்டன், அமல்ராஜ், லலிதா என்ற பஸ் பயணியும் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.