செய்திகள்

பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறு - வியாபாரி அடித்து கொலை: 7 பேர் கைது

Published On 2019-04-20 11:17 GMT   |   Update On 2019-04-20 11:17 GMT
பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறில் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி ஆதாம் நகரைச்சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாகல்கேனி- திருநீர்மலை சாலையில் பன்றி இறைச்சி விற்பனை கடை நடத்தி வருகிறார்.

நேற்றிரவு சீனிவாசன் மது போதையில் இரும்பு கம்பியால் சாலையில் சென்றவர்களை விரட்டியடித்தபடி தகராறில் ஈடுபட்டார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த விஜய், அவரது நண்பர் பார்த்திபன் ஆகியோரை சீனிவாசன் கம்பியால் தாக்கினார்.

இதனால் அவரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது விஜய், பார்த்திபன் தங்களது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

அங்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் சீனிவாசனை கையில் வைத்து இருந்த இரும்பு கம்பியை பிடுங்கி சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சீனிவாசன் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் பார்த்திபன் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News