செய்திகள்

குனியமுத்தூரில் பிளஸ்-2 மாணவர் சுருண்டு விழுந்து பலி

Published On 2019-04-18 14:51 GMT   |   Update On 2019-04-18 14:51 GMT
குனியமுத்தூரில் பால் வாங்க சென்ற பிளஸ்-2 மாணவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மைல்கல்லை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சந்தோஷ் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதியுளளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரிடம் அவரது தாயார் பால் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்தோஷ் பால் வாங்குவதற்காக நடந்து சென்றார். திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடடினடியாக சந்தோசை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News