செய்திகள்
தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் 10 சதவீத தள்ளுபடி
தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தர்மபுரி:
தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் சாப்பிட்ட உணவுக்கான கட்டணதொகை மற்றும் பார்சல் கட்டணதொகையில் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாக தர்மபுரி மாவட்ட ஓட்டல் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் சாப்பிட்ட உணவுக்கான கட்டணதொகை மற்றும் பார்சல் கட்டணதொகையில் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாக தர்மபுரி மாவட்ட ஓட்டல் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.