செய்திகள்
மதுரை உத்தங்குடியில் 2 வீடுகளில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை
மதுரை உத்தங்குடியில் 2 வீடுகளில் 20 பவுன் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை உத்தங்குடியில் உள்ள வளன் நகரைச் சேர்ந்தவர் ரகுராமன். இவரது மனைவி வாசுகி (வயது 41). சம்பவத்தன்று இவர்கள் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 16 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினர். தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிக் கொண்டு தப்பினர்.
தொடர்ந்து அந்த கும்பல், அதே பகுதியில் உள்ள சிவகாமி (53) என்பவரின் வீட்டு முன்பு 4 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பியது.
இது குறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.