செய்திகள்

சேலத்தில் காதல் திருமணம் செய்த பெண் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-04-16 10:03 GMT   |   Update On 2019-04-16 10:03 GMT
சேலத்தில் காதல் திருமணம் செய்த பெண் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொண்டலாம்பட்டி:

சேலம், சூரமங்கலம் கென்னடி நகரை சேர்ந்தவர் கதிரவன். இவரது மனைவி சங்கீதா (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் மும்பையில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கதிரவனுக்கும், சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து சங்கீதா சேலத்திற்கு வந்து கென்னடி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி, அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று சங்கீதா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி சூரமங்கலம் போலீசார் திருவாக்கவுண்டனூர் புத்தர் தெருவில் வசித்து வரும் அவரது தாய் மேகலாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சங்கீதா உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், அம்மாப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபக் கார்த்திக். இவரது மனைவி சந்திரலேகா (வயது 20). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சந்திரலேகா தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது 2 ஆயிரம் பணம், தங்க காசு மாயமானது. இதில் மனவேதனை அடைந்த அவர் நேற்று இரவு வீட்டில தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சேலம் வடக்கு சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆனந்த குமார் மற்றும் ஆர்.டி.ஓ. செழியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News