செய்திகள்

கோவை அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2019-04-16 08:58 GMT   |   Update On 2019-04-16 08:58 GMT
கோவை அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணாம் பாளையத்தை சேர்ந்தவர் ரவி கண்ணன். இவருக்கும் செண்பகம் (வயது 38) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் செண்பகத்துக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு செண்பகம் வழக்கம் போல தூங்கு வதற்காக சென்றார்.

இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அறையில் செண்பகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட செண்பகத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News