செய்திகள்

திண்டுக்கல் அருகே கோவில் விழாவில் மோதல்

Published On 2019-04-15 11:12 GMT   |   Update On 2019-04-15 11:12 GMT
திண்டுக்கல் அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் தாக்கப்பட்டார்.

ஆத்தூர்:

திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை அழகர்நாயக்கன்பட்டியில் காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் சாமி ஊர்வலம் நடைபெற்றபோது ஏராளமான வாலிபர்கள் கூட்டத்தில் ஆடிப்பாடி சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் தவறுதலாக சபரி என்ற வாலிபர் மீது மோதி விட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் சபரி கடும் கோபத்தில் இருந்ததால், கணேஷ் வீட்டுக்கு சென்று அவரை கடுமையாக தாக்கி உள்ளார்.

இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரியை கைது செய்தனர்.

Tags:    

Similar News