செய்திகள்

கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

Published On 2019-04-13 06:42 GMT   |   Update On 2019-04-13 09:36 GMT
தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ தமிழ் புத்தாண்டு உதயமாகட்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit #TamilNewYear
சென்னை:

தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ் புத்தாண்டு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மேம்பட்ட நிலையின் அடையாளமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அன்பு, இரக்கம் மற்றும் வீரம் ஒன்றிணைந்த பண்பின் அடையாளமாக விளங்குகின்றனர். நேர்மையும், ஒழுக்கமும் இவர்களை சமாதானம் மற்றும் நிறைவான வளத்தை நோக்கி வழிநடத்தி செல்கின்றன.



மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ இந்த நாள் உதயமாகட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BanwarilalPurohit #TamilNewYear
Tags:    

Similar News