எலச்சிபாளையம் அருகே கஞ்சா பதுக்கி விற்பனை: வாலிபர் கைது
ஈரோடு:
பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாசம் தலைமையிலான போலீசார் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். அந்த நபரை சோதனை செய்ததில் அவரது இடுப்பில் பிளாஸ்டிக் கவரில் 225 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் அவர் பர்கூர் கிராமம், எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என தெரியவந்தது கர்நாடக மாநிலம் சென்று கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.