செய்திகள்

புதுக்கடை அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

Published On 2019-04-11 11:32 GMT   |   Update On 2019-04-11 11:32 GMT
புதுக்கடை அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை:

புதுக்கடையை அடுத்த செட்டியார் வளாகம் பணங்கால முக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில், பத்தி ரேஷ்வரி அம்மன் கோவில் உள்ளது.

சம்பவத்தன்று கோவிலில் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் நடை சாத்தப்பட்டது. பின்னர் மறுநாள் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு நிர்வாகி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சம்பவம் குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கோவில் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் மதிப்புள்ள 4 தங்க தாலிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையனின் ஒரு கைரேகை சிக்கியது.

போலீசார் இந்த கைரேகையை கொண்டு பழைய குற்றவாளின் கைரேகைகளை ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளனவா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News