செய்திகள்

கபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2019-04-11 11:28 GMT   |   Update On 2019-04-11 11:28 GMT
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்களம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம் (வயது 60) விவசாயக்கூலி தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. வயிற்றுவலி குணமடையாததால் மனமுடைந்த ராமலிங்கம் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, ராகவன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News