செய்திகள்

கடையம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2019-04-09 13:38 GMT   |   Update On 2019-04-09 13:38 GMT
கடையம் அருகே தொழிலாளி உடலில் கட்டி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:

கடையம் அருகே உள்ள புலவனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது47). கூலி தொழிலாளி. உடலில் கட்டி ஏற்பட்டு அவதிப்பட்ட நேற்று திடீரென விஷத்தை குடித்து விட்டார். 

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். 

இதுபற்றி கடையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News